உளுந்தூர்பேட்டை, ஜூன் 20- உளுந்தூர்பேட்டை நகரம் முழு வதும் நிலவும் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 3 ஆண்டுகளுக்கு முன்பு சமுத்திர குளம் அருகில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் நீர்த்தேக்க தொட்டி இதுவரை திறக்கப்பட வில்லை. உடனடியாக குடிநீர் தொட் டையை திறக்க வேண்டும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் வியாழ னன்று பேரூராட்சி அலுவலகம் முன்பு வியாழனன்று (ஜூன் 20) காலி குடங்களுடன் போராட்டம் நடை பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு போராட்டக்குழு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமுத்திரகுளம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பழுது பார்த்து மக்கள் பயன்பாட் டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலித் பகுதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை பழுது பார்ப்பது அல்லது புதிய தொட்டி கள் அமைக்கப்படும் என்றும், அந்த பகுதியில் உள்ள 3 குளங்களையும், ஏரிகளையும் தூர்வாரி சீரமைப்பது, அனைத்துப் பகுதிகளுக்கும் நான்கு நாட்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் சட்ட மன்ற உறுப்பினர் கூறினார். இதற் காக மாவட்ட நிர்வாகத்தில் இருந்து 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும், அதேபோல பாதாள சாக் கடை திட்டத்தால் சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தாகவும் அவர் தெரிவித்தார். இதை யடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் அதிமுக நகரச் செயலாளர் துரை, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.கே.பழனி, நகரச் செயலாளர் கே. தங்கராசு, நகரக்குழு உறுப்பினர்கள் ஐ.ஷேக்சலாவுதீன், பி.சேகர், எம்.சுப்பிரமணியம், பி.ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் கட்சியின் சார்பில் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் காலிக்குடங்களுடன் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சங்கராபுரம் வட்டத்தில் ஐந்து இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் மூன்று இடங்க ளில் பேச்சுவார்த்தை மூலம் உடன் பாடு ஏற்பட்டதால் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இரண்டு இடங்க ளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். கே.பூவராகன், வட்டச் செயலாளர் பழனி, மாவட்டக் குழு உறுப்பினர் சசிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவெண் ணைநல்லூர் ஒன்றியம் சரவண பாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில் தெற்கு மாவட்டச் செயலா ளர் டி.ஏழுமலை கலந்து கொண் டார். அருங்குறுக்கை கிராமத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.செந்தில், மாவட்டக் குழு உறுப்பினர் அ.வீராசாமி, ஒன்றியச் செயலாளர் எஸ்.மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். இருவேல்பட்டு கிராமத்தில் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டதால் அங்கும் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.