புதுச்சேரி,பிப்.25- அரிசிக்கு பதில் பணம் வழங்கும் முடிவை எதிர்த்து புதுச்சேரியில் முற்றுகை போராட்டம் நடத்த மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் முடிவு செய்துள்ளன. புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக் குழு அலுவலகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு சிபிஎம் பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் சுதா சுந்தரராமன், திமுக தெற்கு மாநில அமைப்பாளர் ஆர்.சிவா எம்எல்ஏ, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கண்ணபிரான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி வி.எஸ்.அபிஷே கம், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் பெரு மாள், மூத்த பிரதேசக் குழு உறுப்பினர் தா.முரு கன், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், விசிக முதன்மைச் செயலாளர் தேவ.பொழி லன், தலைமை நிலைய செயலாளர் செல்வ நந்தன், இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்ரமணியம், மாநிலக் குழு உறுப்பி னர் மோதிலால், திராவிடர் விடுதலை கழகத் தலைவர் சிவ.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தீர்மானங்கள்
ரேஷன் கடைகளில் அரிசி வழங்க வேண்டும் என்ற காங்கிரஸ் - திமுக கூட்டணி அரசின் முடிவிற்கு விரோதமாகவும், பல் வேறு இயக்கங்கள் நடத்திய கள ஆய்வு முடிவிற்கு விரோதமாகவும் ஆளுநரின் சுயேச்சையான முடிவின் படி அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் புதுச்சேரி முழுவதும் இந்த கட்சிகள் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் பிரச்சாரத்தில் பொதுமக்களிடம் கையொப் பம் பெற்று குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் இலவச அரிசி திட்ட பயனாளிகளையும், பெண்களையும் அணி திரட்டி மார்ச் 5இல் அனைத்துக் கட்சிகள் சார்பில் துணைநிலை ஆளுநர் அலுவல கத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
பல்கலைக்கழகம் முன்பு போராட்டம்
மத்திய பல்கலைகழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு மற்றும் 200 விழுக்காடு கல்வி கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி பிப்ரவரி 28ஆம் தேதி காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழக வளாகம் முன்பு அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.