சென்னை,மார்ச்.08- ரூ.72 கோடியில் புதிதாகத் தோழிகள் விடுதி அமைக்கப்படவுள்ளதாக மகளிர் தின விழாவில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
மேலும் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய 9 மாவட்டங்களில் ரூ.72 கோடியில், 700 படுக்கைகளுடன் கூடிய புதிய தோழி விடுதிகள் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்