tamilnadu

img

பழந்தமிழ் எழுத்து வடிவமான தமிழியை ஆவணப்படுத்தும் நிகழ்ச்சி

பழந்தமிழ் எழுத்து வடிவமான தமிழியை ஆவணப்படுத்தும் தொல் தமிழ் விழா சென்னை வேளச்சேரியில் உள்ள ஏ.ஜி.எம் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் க.இராஜேந்திரன் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் அறம் கிளையின் செயலாளர் உமர்பாருக் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுபேசினார். எல்.கே.ஜி.மாணவி திவ்ய ரஞ்ஜினி சங்க இலக்கிய நூல்களை பட்டியலிட்டார். 7ஆம் வகுப்பு மாணவி நித்யஸ்ரீ99 வகையான மலர்களின் பெயர்களை வரிசைப்படுத்தினார். 10ஆம்வகுப்பு மாணவி பிரதிஷா தமிழின் தொன்மை குறித்தும் மலர்விழி தமிழகர்களின் அகவாழ்க்கை குறித்தும் பேசினர். இந்தநிகழ்ச்சியில் முதல்வர் ஜெயகாந்தி, பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.விழாவில் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.