சென்னை,பிப்.6- மறைந்த மருத்துவப் போராளி மரு. லட்சுமி நரசிம்மனின் 4வது நினைவு தினத்தையொட்டி, அவ ரது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதல் வருக்கு அரசு மருத்துவர்களுக்கான சட்ட போராட்டக் குழு வேண்டு கோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலை வர் மரு. எஸ். பெருமாள் பிள்ளை அறிக்கையில் கடந்த அதிமுக ஆட்சி யில் அரசு மருத்துவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில் காலவரையற்ற வேலை நிறுத்தம், சாகும்வரை உண்ணா விரதம் மேற்கொண்டனர். அப்போது தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்துக் கும் மேற்பட்ட அரசு மருத்து வர்கள் 7 நாட்கள் நடந்த வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட னர்.
பின்னர் முதல்வரின வேண்டு கோளை ஏற்று போராட்டத்தை திரும்ப பெற்றோம். இருப்பினும் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வில்லை. அதே நேரத்தில் 118 மருத்துவர்களை 500 கி.மீட்டருக்கு அப்பால் இடமாற்றம் செய்து அரசு தண்டித்தது. மேலும் 17பி குற்றக் குறிப்பாணை யும் வழங்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் குறிப்பாக 40 பெண் மருத்துவர்களை அரசு அதிரடியாக இடமாற்றம் செய்து தண்டித்தது வேதனையாக இருந்தது. இதனால் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற மரு. லட்சுமி நரசிம்மன் மன உளைச்சலில் இருந்து 2020 ஆம் ஆண்டு பிப். 7 அன்று அவர் மாரடைப் பால் உயிரிழந்தார்.
அவர் உயிரிழந்து மூன்று ஆண்டு கள் கடந்து விட்டது. எனவே, அதிமுக ஆட்சிக்கு பின்னர் பொறுப் பேற்ற திமுக அரசு அவரது உயிர் தியாகத்துக்கு மதிப்பளித்து, கலை ஞரின் அரசாணை 354 க்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசு மருத்துவர்களுக்கு 12 ஆண்டு களில் ஊதியப்பட்டை நான்கு வழங்க தமிழக முதல்வர் சுகாதாரத்துறை அமைச்சர் முன் வர வேண்டும் என்று அந்த அறிக்கையில் பெருமாள் பிள்ளை கேட்டுக்கொண்டார்.