tamilnadu

img

துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்காதே திருவொற்றியூரில் செங்கொடி சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை,மே 29 -துப்புரவு பணியை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது என வலியுறுத்தி  செங்கொடி சங்கம் சார்பில் திருவொற்றியூர் மண்டல அலுவலக வளாகத்தில்  புதனன்று(மே 29) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட உதவிசெயற்பொறியாளர் கோவிந்தசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், குப்பைசேகரிக்கும் லாரி மற்றும் இதர வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும், டிரை சைக்கிள் மற்றும் குப்பைத்தொட்டிகளை சீரமைத்து தர வேண்டும்,என்.யூ.எல்.எம் தொழிலாளர்களுக்கு 5ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு செங்கொடி சங்க துணை பொதுச் செயலாளர் டி.ராஜன் தலைமை தாங்கினார். தலைவர் எல்.சுந்தரராஜன், பொதுச் செயலாளர் சீனிவாசலு, துணைத்தலைவர் என்.கிருஷ்ணமூர்த்தி, துணை பொதுச் செயலாளர்கள் முனுசாமி, தேவராஜ், மண்டலத் தலைவர் யோபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்நது  மண்டலத் தலைவர் முருகன், சங்கத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் தவறிழைத்த அதிகாரி மீது துறைவாரி நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும், மற்றகோரிக்கைகள் 2 வாரங்களில் சரிசெய்யப்படும் என உறுதியளித்தார்.