tamilnadu

img

பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம்- தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்துவரும்சூழலில் பொதுமக்கள் பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு தெரிவித்துள்ளது. 
தமிழகத்தின் பல பகுதிகளில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவத்துள்ளது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் பழைய கட்டடங்களில் தங்க வேண்டாம் என்று தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இதுகுறித்து தமிழக பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது
பொதுமக்களுக்கு அன்பான வேண்டுகோள்
தமிழகத்தில் தொடர்ந்து 

பொது மக்களுக்கு அன்பான வேண்டுகோள்! தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால் பழைய கட்டிடங்களில் தங்குவதோ அருகில் செல்லவோ வேண்டாம் , அவ்வாறு பழைய கட்டடங்களில் தங்கி இருப்பவர்கள் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.  தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக கனமழை பெய்து வருவதால்..கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிக்கவோ கடந்து செல்லவோ வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.