tamilnadu

img

ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் தேர்வெழுத வேண்டுமா? சினத்தோடு கண்டிக்கிறோம்! - கவிஞர் வைரமுத்து

சென்னை, ஜன.08-

அஞ்சல்துறை தேர்வில் ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு கவிஞர் வைரமுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அஞ்சலக கணக்கர் தேர்வுக்கான மொழி பட்டியல் வெளியானது. அதில், தமிழ் விடுபட்டு, இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல்வாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பாடலாசிரியர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், அஞ்சல்துறைத் தேர்வுக்குத் தமிழில் தயாராகிக் கொண்டிருந்த ஒரு தலைமுறையின் தலையில் இடி விழுந்திருக்கிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும்தான் தேர்வெழுத வேண்டுமா? இனி ஆங்கிலத்திலும் இந்தியிலும் முகவரி எழுதினால்தான் அஞ்சல் சென்று சேருமா? சினத்தோடு கண்டிக்கிறோம். என்று தெரிவித்துள்ளார்.

;