திருவள்ளூர், ஜன. 11- நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி பெரும்தலைவர் மற்றும் ஒன்றிய பெருந்தலைவர் பதவிக் கான தேர்தல் சனிக்கிழமை (ஜன. 11) நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி பெரும் தலைவராக திமு கவை சேர்ந்த உமாமகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டார். ஒன்றிய பெருந் தலைவருக்கான தேர்தலில் திமுக சார்பில் திருவள்ளூர் ஜெயசீலி, பூந்த மல்லி ஜெயக்குமார், சோழவரம் ராஜாத்தி, புழல் தங்கமணி, வில்லி வாக்கம் கிரிஜா, மீஞ்சூர் கே.ரவி, அதி முக சார்பில் எல்லாபுரம் ரமேஷ், கடம் பத்தூர் சுஜாதா சுதாகர், கும்மிடிப்பூண்டி சிவக்குமார், பூண்டி வெங்கடரமணா ஆகியோர் ஒன்றிய பெருந்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர். திருவாலங்காடு, திருத்தணி, இரா.கி.பேட்டை, பள்ளிப் பட்டு ஆகிய நான்கு ஒன்றியங்களில் ஒன்றிய பெருந்தலை வர்கள் தேர்வு செய்வது பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.