சென்னை, செப். 16 - சென்னை அண்ணா அறிவா லயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. திங்களன்று (செப்.16) நேரில் சந்தித்துப் பேசினார்.
அதைத்தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்கப் பயணத்தை வெற்றிகர மாக முடித்துத் திரும்பிய முதல்வ ருக்கு எங்களது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்தோம். அத்துடன், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி விசிக சார்பில் நடைபெறும் ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மக ளிர் மாநாடு’ நிமித்தமாக- தமிழ்நாட்டில் அரசு மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாகக் குறைக்க வேண்டும். அரசமைப்புச் சட்டம் உறுப்பு எண் 47-இன் படி படிப்படியாக மது விலக்கை இந்திய அளவில் கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசு களும் முன்வர வேண்டும்- என்று இரண்டு முக்கியமான கோரிக்கைகள் கொண்ட மனுவை முதல்வரிடம் வழங்கினோம்.
நாட்டில் பூரண மதுவிலக்கு தேவை என்ற கருத்து திமுகவுக்கும் உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்தார். இது கட்சிக்கான பிரச்ச னையோ, கூட்டணிக்கான பிரச்ச னையோ அல்ல. மதுவிலக்கு என்பது நாட்டுக்கான பிரச்சனை. மதுவிலக்கு மாநாட்டையும் அரசியல் கூட்டணியை யும் முடிச்சுப்போட வேண்டாம். அதிகார பகிர்வு குறித்து முதலமைச்சரிடம் பேசவில்லை. திமுக மற்றும் விசிக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. 2026 தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன. இவ்வாறு திருமாவளவன் கூறினார்.