சென்னை, மே 27 - மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் 3 திமுக வேட்பாளர்க ளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வெள்ளியன்று (மே 27) வேட்புமனு தாக்கல் செய்தனர். தமிழகம் உட்பட 15 மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்கள் 57 பேரின் பதவிக் காலம் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் முடிவடை கிறது. இதையொட்டி, இந்த பதவி யிடங்களுக்கான தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தமிழகத்தில் திமுக எம்பிக்களான டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோரது பதவிக் காலமும், அதிமுக எம்.பி.க்களான ஏ.நவநீத கிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணி யன், ஏ.விஜயகுமார் ஆகியோரது பதவிக் காலமும் வரும் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த 6 இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற வுள்ளது. வேட்புமனு தாக்கல் கடந்த மே 24 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட் டுள்ள, தஞ்சை சு.கல்யாணசுந்தரம், கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் மற்றும் இரா.கிராராஜன் ஆகியோர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் வெள்ளிக்கிழமை(மே27) வேட்புமனு தாக்கல் செய்தனர். சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சட்டமன்ற செயலரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சீனி வாசனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். துரைமுருகன், டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட் டோர் உடனிருந்தனர். திமுகவுக்கான 4 இடங்களில், அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.