சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும், அவரது மனைவியும் அக்கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர்.கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனதால், விஜயகாந்த், கடந்த 22 ஆம் தேதி, சென்னை - நந்தம்பாக்கம் தனியார் “மியாட்” மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து வைரஸ் தொற்று உறுதி ஆகி, பிரேமலதாவும் மருத்துவமனையில் சேர்ந்தார்.இருவருக்கும் அளிக்கப்பட்ட சிகிச்சையில் குணமடைந்து விரைவில் வீடு திரும்புவார்கள் என்று மருத்துவ அறிக்கையில் மருத்துவமனை நிர்வாகம் கூறியிருந்தது.இந்த நிலையில், இருவரது உடல் நலனில் முன்னேற்றம் ஏற் பட்டதால் வீட்டிற்கு அனுப்பி வைத் துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.