புதுச்சேரி, ஜூலை 17- சிபிஎஸ்இ பாடத்திட்டத்தி லிருந்து பன்முகத்தன்மை, கூட்டாட்சி உள்ளிட்ட பாடப் பிரிவுகளை நீக்கியுள்ள மத்திய அரசை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிக ரித்து வரும் சூழலில் பல்க லைக்கழக மானியக்குழு இறுதியாண்டு மாணவர்க ளுக்கு இணையவழி தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. இந்த உத்தரவை திரும்பப் பெற்று, முந்தைய பருவத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் களை தேர்ச்சி பெறச் செய்ய வேண்டும். சிபிஎஸ்இ பாடப்பிரிவில் ஜனநாயகம், பன்முகத் தன்மை, கூட்டாட்சி, குடி யுரிமை, மதசார்பின்மை, அர சியல் அறிவியல், மற்றும் சமூகநீதி போராளி தந்தை பெரியார் குறித்த பாடப் பிரிவு கள் நீக்கப்பட்டுள்ளதை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. லாஸ்பேட்டை விளிம்பு நிலை வாழ்வாதார மையம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிரதேச தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். செய லாளர் விண்ணரசன் உள் ளிட்டோர் கலந்து கொண்ட னர். மதகடிப்பட்டு பாகூர் உள்ளிட்டு புதுச்சேரி முழுவ தும் மாணவர்கள் சங்க நிர்வாகிகளின் வீடுகள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். போராட்டத்தின் போது பல்கலைக் கழக மானியக்குழு அனுப்பிய சுற்றறிக்கை நகலை மாண வர்கள் எரித்தனர்.