tamilnadu

img

தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி பிற மாநிலங்களுக்கு பகிர்வு - சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை,பிப்.09- தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட கல்வி நிதி பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டதற்கு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது;
நிதிப்பகிர்வில் தங்களுக்குரிய நிதியை மாநிலங்கள் கேட்பது அடிப்படை உரிமையே. தேசிய கல்விக் கொள்கையினை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக் கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 2,152 கோடி நிதியைப் பிற மாநிலங்களுக்குப் பகிர்ந்துள்ளது ஒன்றிய அரசு.
கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரான ஒன்றிய அரசின் இந்த செயல்பாடே அமைச்சர் பியூஷ் கோயல் கூறும் "அற்ப சிந்தனை" என்கிற வார்த்தைக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒன்றிய அரசின் இந்த "அற்ப செயலை" வன்மையாகக் கண்டிக்கிறோம். என தனது கண்டனங்களை அவர் தெரிவித்துள்ளார்.