tamilnadu

img

பள்ளிகளில் இன்று முதல் 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்கள், இன்று முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அனைத்து பள்ளி மாணவர்களும் அக்டோபர் 4 ஆம் தேதி, காலை 10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மேலும், மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளப் பள்ளிக்கு வரும் மாணவர்கள், பெற்றோர்கள் முகக்கவசம் அணிவதுடன், தனிநபர் இடைவெளி உட்பட கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் தேர்வுத்துறை  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;