சென்னை பல்கலைக் கழக குற்றவியல் துறையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து திங்களன்று (டிச.16) “பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்கள் - குழந்தைகள் மற்றும் இந்தியாவில் நடைபெறும் சட்டத்திற்கு புறம்பான கொலைகள்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்வை நடத்தின. சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு துறைத்தலைவர் முனைவர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாதர் சங்க அகில இந்திய துணைத்தலைவர் உ.வாசுகி, மாநில பொதுச்செயலாளர் பி.சுகந்தி, வழக்கறிஞர் சுதாராமலிங்கம், பத்திரிகையாளர் கவிதா முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.