tamilnadu

img

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாள  பெண் தீக்குளிக்க முயற்சி

சொத்து பிரச்சனையில் உறவினர்கள் அபகரித்ததாக கூறி மாற்றுத்திறனாளி பெண் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம், வண்டி கேட், சபீர் நகர்  பகுதியில் வசிப்பவர்கள் ரவி- திலகம் தம்பதியினர். மாற்றுத் திறனாளியான இருவரும் திங்கட்கிழமை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வருகை தந்தனர். அப்போது திலகம் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீ சார் தடுத்து நிறுத்தி அவரை மீட்டனர்.  அப்போது அவர்கள்  கூறுகையில் தங்களுக்கு தானமாக அளித்த சொத்தின் பாதியை உறவினர்கள் விற்பனை செய்து விட்டதாகவும், அதை மீட்டுத் தரக் கோரியும், அதேபோல் என்னுடைய கணவர் கால்களையும் சரிசெய்ய மருத்துவ உதவி செய்ய வேண்டும் என முறையிட்டனர். பின்பு போலீசார் பெண் மணிக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.