tamilnadu

img

தரணி சர்க்கரை ஆலைகள் ரூ.75கோடி கரும்பு பணப் பாக்கியை அக்டோபர் 20 முதல் தர ஒப்புதல்

சென்னை:
தரணி சர்க்கரை ஆலைகள் ரூ.75கோடி கரும்பு பணப் பாக்கியை அக்டோபர் 20 முதல் தர ஒப்புதல் தெரிவித்துள்ளன.இதுதொடர்பாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்தி வருமாறு:
மாநிலத்தில் வாசுதேவநல்லூர் ‌தரணி, சங்கராபுரம் தரணி, போளூர் தரணி என தரணி குழுமத்திற்கு சொந்தமான மூன்று சர்க்கரை ஆலைகள் உள்ளன. இவை 2018-19 ல் அரைத்த கரும்புக்கு ரூ.75கோடி விவசாயிகளுக்கு கரும்பு பணப் பாக்கியை (FRP)இரண்டு வருடங்களுக்கு மேலாக தரவில்லை. கரும்பு கொள்முதல் செய்த 15 நாட்களில் விவசாயிகளுக்கு கொடுத்திருக்க வேண்டிய கரும்பு பணத்தை இரண்டு வருடங்களுக்கு மேலாக தராததால் விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு ஆளாகினர்.கரும்பு பணப் பாக்கியை விவசாயிகளுக்கு மாநில அரசு பெற்றுத்தர வேண்டும்எனக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கரும்பு விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

அக்.8ஆம் தேதி ‌தென்காசி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர்களிடம் மனுவும் அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட ஆட்சியர் அக்டோபர் 20 ஆம் தேதி கரும்பு பணப்பாக்கியை தருவதாக  கூறியுள்ளனர் என தெரிவித்தார்.மாநில வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் மாநில சர்க்கரை துறை அதிகாரிகள்கரும்பு பணப் பாக்கியை அக்டோபர் 20 முதல்தருகிறோம் என்று தரணி ஆலை உரிமையாளர் பெரியசாமி தெரிவித்துள்ளார் என்று தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைமையிடம் கூறியுள்ளனர்.மாநில அரசு , சர்க்கரை துறை ஆணையர்அவர்களே தெரிவித்துள்ள காலத்திற்குள் கரும்பு பணப் பாக்கி முழுவதையும் பெற்றுத்தருவதை உறுதிப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.