சென்னை, மார்ச் 18 - பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிர மாணம் செய்து வைக்க முடியாது என்று ஆளுநர் ரவி கூறியிருப்பது, அதிகார வரம்பை மீறும் நடவடிக்கை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது: திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பின ரான க. பொன்முடி அவர்களை மாநில அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்திருக்கிறார்.
சட்ட ரீதியான தடைகள் ஏதும் இல்லாத போது மாநில அரசின் பரிந்துரையை நிறை வேற்றுவது தான் மாநில ஆளுநரின் கடமை ஆகும். ஆனால், தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளுக்கும், முடிவுகளுக்கும் முட்டுக்கட்டை போடு வதே ஆளுநரின் செயலாக இருக்கிறது. க.பொன்முடி பதவி ஏற்பு பிரச்சனை யிலும் ஆளுநர் ஆர்.என். ரவி தனது அதிகார வரம்பை மீறுகிறார். இது முதல்வரின் பரிந்துரையையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் அப்பட்டமாக மீறுகிற நட வடிக்கைகள் ஆகும்.
க. பொன்முடி மீதான தீர்ப்பைச் செயல்படுத்துவதற்கு உச்ச நீதி மன்றம் தடை விதித்திருக்கும் நிலையில் தான், அவருக்கு அமைச்சர் பதவி அளிப்ப தற்கு மாநில அரசு பரிந்துரை செய்திருக் கிறது. இதற்கு சட்டரீதியான தடைகள் ஏதும் இல்லை. மேலும், ஒருவர் குற்றவாளி என்று இறுதி தீர்ப்பளிக்கப்படும் வரை அவர் நிரபராதி தான்” என்கிற சட்டவிதி களின் அடிப்படையில் அவர் மீண்டும் சட்ட மன்ற உறுப்பினராக தொடர்வார் என்று சபாநாயகர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனவே, தமிழ்நாடு ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு தனது கடமையை நிறை வேற்றிட வேண்டும். மாநில அரசின் பரிந்து ரையை ஏற்று, க. பொன்முடிக்கு அமைச்ச ராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.