உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த்பூஷன் மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றம் முன்பு மாநிலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.மார்த்தாண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதேபோல் புதுச்சேரி நீதிமன்ற வளாகம் முன்பு அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.தட்சணாமூர்த்தி தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.சரவணன், வழக்கறி ஞர்கள் ஆறுமுகம், செல்வம், சதீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.