tamilnadu

img

தமிழ்நாடு பெட்ரோலியம் மற்றும் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியூ) சார்பில் ஆர்ப்பாட்டம்

பாரத் பெட்ரோலியம் மற்றும் `ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு பெட்ரோலியம் மற்றும் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியூ) சார்பில் வெள்ளியன்று (நவ.15) அத்திப்பட்டு புதுநகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் இ.ஜெயவேல் தலைமை தாங்கினார்.இதில் மாநில துணைத் தலைவர் கே.விஜயன்,  மாவட்ட துணைத் நிர்வாகிகள் ஜி.வினாயகமூர்த்தி, எஸ். நரேஷ்குமார்.எஸ். செல்வராஜ், கே.வெங்கடையா, அகமதுசரிப், கே.வெங்கடேசன் உட்பட பலர் பேசினர்.