மணிப்பூர் வன்முறையை கண்டித்தும், கலவரத்தை கட்டுப்படுத்தாத பாஜக அரசு பதவி விலக வலியுறுத்தியும் சிபிஎம் சார்பில் கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.இதில் கட்சியின் மாநில குழு உறுப்பினர் எஸ்.நம்புராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.துளசிநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.