tamilnadu

img

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் குடிநீர் கேட்டு நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருத்தாசலம் நகரம் 8-வது குறுக்குத் தெரு, 15 வது வார்டில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளதை கண்டித்து பொதுமக்கள் சிபிஎம் உடன் இணைந்து நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட செயலாளர் ஆர். கலைச்செல்வன் தலைமை தாங்கினார். வட்டக் குழு உறுப்பினர்கள் கே.செல்வகுமார், பி. செந்தில், நகர்குழு உறுப்பினர் மார்க்கெட் கே.சேகர், கிளை செயலாளர்கள் எல்.ஐ.சி.கணேசன், முத்து, வேல்முருகன், முன்னாள் கவுன்சிலர் தாஸ், மாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.