மின்சார சட்ட மசோதா 2020ஐ திரும்பப் பெற வலியுறுத்தி கடலூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மின்சாரத்தை தனியாரிடம் தாரைவார்க்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் புதுவை உப்பளம் மின்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.