பெரியார் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ப.செல்வன், அ.உதயகுமார், தி.க. நிர்வாகிகள் எம்.பலராமன், ஓசூர் சுந்தரமூர்த்தி, கோ.சுந்தர், அண்ணாதாசன், ஜானகிராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.