சர்வதேச பெண்கள் தினமான ஞாயிறன்று (மார்ச் 8) அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரவாயல் பகுதிக்குழு சார்பில் மேற்கு முகப்பேரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பகுதி தலைவர் எஸ்.பிச்சையம்மாள் தலைமையில் இக்கூட்டத்தில் மாநில தலைவர் எஸ்.வாலண்டினா, மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, சமூக ஆர்வாளர்கள் நர்கீஸ் சுல்தானா, டி.பவானி, மாதர் சங்க பகுதி பொருளாளர் ஆர்.விஜயா, துணை செயலாளர் எஸ்.சாவித்திரி உள்ளிட்டோர் பேசினர்.