திருவள்ளூர், ஜூலை 5- வடசென்னை அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூலை 5) மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர். வடசென்னை அனல் மின் நிலையம் அலகு-1 ல் 700கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 18 ஆண்டு களாக பணியாற்றி வருகின்றனர். அதேபோல், அலகு 2 ல் சுமார் 500 தொழி லாளர்கள் 5-ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆனால் நிர்வாகம் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கவில்லை.
இந்நிலையில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, தினக் கூலியாக ரூ.600, கள உதவியாளர்கள் காலிப்பணியிடங்களில் ஒப்பந்த தொழிலாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் வெள்ளியன்று (ஜூலை 5) வடசென்னை அனல் மின் நிலையம் அலகு 1 மற்றும் 2- ஆகிய இரண்டு இடங்களில் மண் சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டம் நடைபெற்றது. மின் நிலையம் அலகு-1 நுழைவு வாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்ட த்திற்கு சிஐடியு கிளைத் தலைவர் இ.ஜெயவேல் தலைமை தாங்கினார். வடக்கு மண்டலச் செயலாளர் ரவிக்குமார், நிர்வாகிகள் சுந்தரம், சலீல்குமார், பாண்டியன், சீனிவாசன், பிதாப் ஆகியோர் பேசினர். அலகு-2 ல் நடைபெற்ற போராட்டத்திற்கு கே.வெங்ட்டையா தலைமை தாங்கினார். இதில் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலை வர் ஜெயராமன், நிர்வாகிகள் வெங்கடே சன், அகமதுசலிப், தாமரைக்கண்ணன், தேவேந்திரன் ஆகியோர் கண்டனவுரை யாற்றினர்.