அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 % உயர்த்தி வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது 2024 ஜனவரி 1-ஆம் தேதி முதல் அகவிலைப்படி 9% உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும்.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை இ.சி.எஸ் மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.