tamilnadu

img

மத்திய சென்னையில் தயாநிதிமாறன் 4வது முறையாக வெற்றி பெற்றார்

சென்னை, ஜூன் 5 - திமுக வேட்பாளர் தயாநிதிமாறன் மத்திய சென்னை மக்களவைத் தொகு தியில் 4வது முறையாக வெற்றி பெற்றார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் 5வது முறையாக தயாநிதி மாறன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக அணி சார்பில் தேமுதிகவை சேர்ந்த பி.பார்த்தசாரதி, பாஜகவை சேர்ந்த வினோஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர்.

தொகுதியில் உள்ள 13 லட்சத்து 50  ஆயிரத்து 161 வாக்காளர்களில் 7  லட்சத்து 30 ஆயிரத்து 549 பேர்  வாக்களித்தனர். அதாவது 53.96  விழுக்காட்டினர் தங்களது வாக்கு களை செலுத்தினர். இந்த வாக்குகள் லயோலா கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டது.

அஞ்சல் வாக்கு

3808 அஞ்சல் வாக்குகளில் தயா நிதிமாறன் 1,562, வினோஜ் 1,100, பார்த்த சாரதி 244, கார்த்திகேயன் 166 வாக்கு களை பெற்றனர். 564 வாக்குகள் செல்லாதவை என்பது குறிப்பிடத் தக்கது.
அஞ்சல் வாக்கு உள்ளிட்டு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான மொத்த வாக்குகளில் தயாநிதிமாறன்  4 லட்சத்து 13 ஆயிரத்து 848 வாக்கு கள் பெற்று வெற்றி பெற்றார்.

அதாவது 2 லட்சத்து 44 ஆயிரத்து 689 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலர்  கே.ஜெ.பிரவீன் குமாரிடம் இருந்து தயாநிதிமாறன் பெற்றுக் கொண்டார். அப்போது அமைச்சர் பி.கே.சேகர்பாபு,  மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மத்திய சென்னை தொகுதியில் முன்னாள் அமைச்சரும், தயாநிதி மாறனின் தந்தையுமான முரசொலி மாறன் 3 முறை வெற்றி பெற்றிருந்தார்.  இந்த தொகுதியில் தயாநிதிமாறன் 4 முறை வெற்றி பெற்ற தனது தந்தை யின் சாதனையை முறியடித்துள்ளார்.

வாக்கு விவரம்

தயாநிதிமாறன் (திமுக) 4,13,848
வினோஜ் (பாஜக) 1,69,159
பார்த்தசாரதி (தேமுதிக) 72,016
கார்த்திகேயன் (நாதக) 46,031
நோட்டா 11,163
வாக்கு வித்தியாசம் 2,44,689