சென்னை துறைமுகத்தை தனியார்க்கு தாரைவார்க்கும் பெருந்துறைமுக ஆணையச்சட்டம் 2019ஐ அடிபோடு ரத்து செய்யக்கோரி மெட்ராஸ் போர்ட் அண்டு டாக் எம்பிளாயிஸ் யூனியன் (சிஐடியு) சார்பில் துறைமுகம் வாயிலில் வெள்ளி யன்று (செப்27) மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் பொதுசசெயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன் சிறப்புரையாற்றினார். எச்எம்எஸ் பொதுச்செய லாளர் ஜி.எம்.கிருஷ்ணமூர்த்தி , கடல்வழி போக்குவரத்து சம்மேளனப்பொதுச்செயலாளர் டி.நரேந்திரராவ், ஏஐடியுசி பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சரவணன் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.