எர்ணாவூர் பகுதியில் தண்டவாளத்தை கடந்து செல்லும்போது உயிர்பலி ஏற்படுவதை தடுக்க சுரங்கப்பாதை அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி .ஆறுமுகம் தலைமையில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. முதல் கையெழுத்தை மாநில சட்டத் துறை இணைச் செயலாளர் வீ .கண்ணதாசன், முன்னாள் நகரமன்றத் தலைவர் ஆர்.ஜெயராமன் ஆகியோர் தொடங்கிவைத்தனர். இதில் சிபிஎம் பகுதி செயலாளர் எஸ். கதிர்வேல், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ் .பாக்கியம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.