சென்னை கருத்தரங்கில் பி.சுகந்தி குற்றச்சாட்டு
சென்னை, டிச. 6- சைபர் கிரைம் வெறும் சைபராக உள்ளது என்று அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பி.சுகந்தி கூறினார். பாதுகாப்பான இணையம் மற்றும் பெண்களுக்கு நீடித்த வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் சென்னை எழும்பூரில் வெள்ளியன்று (டிச. 6) நடைபெற்றது. சென்னை சமூகப்பள்ளியும் ஸ்வீடிஷ் இன்ஸ்ட்டியூட்டும்,செவ்நிங் பல்கலைகழக முன்னாள் மாணவர் அமைப்பும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் துவக்கி வைத்தார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வி நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். இதில் கலந்து கொண்டு பி.சுகந்தி பேசியதாவது:
சேலம் மாவட்டம் விஷ்ணுபிரியா வின் (19) புகைப்படத்தை முகநூலில் இருந்து எடுத்து, மார்பிங் செய்து வேறு ஒருவர் வெளியிடுகிறார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் காவல் துறையினர் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய மறுக்கிறது. பெண்ணி யம் பெற்றோரும் மகள் தவறாக நடந்திருப்பாளோ என சந்தேகப்படு கிறார்கள். மகள் தான் எந்த தவறும் செய்யவில்லை என மறுக்கிறார். காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அந்த பெண் தற்கொலை செய்து கொள்கிறார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் இந்த சமூகம் என்னை தவறாக நினைத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் எனது பெற்றோரே என்னை நம்ப வில்லை என மிகுந்த வேதனையுடன் தெரிவித்திருந்தார். 2016ஆம் ஆண்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில், 6 பெண் வழக்கறி ஞர்கள் தங்களை நீதிபதிகளுடன் தொடர்புபடுத்தி தவறான செய்தி பரப்பப்படுவதாக புகார் கூறினார். வழக்கறிஞர் வைகையும் இதுகுறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சைபர் கிரைம் குற்றங்களை தடுக்க அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை அரசு சிறப்பு சட்டத்தை இயற்றவில்லை.
காவல்துறை ஆணையரே இப்படி என்றால்....
பத்திரிகை துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பல்வேறு வடிவங்களில் பெண்கள் மீதான தாக்குதல் தொடுக்கப்படுகிறது. கோவையில் காவல் துறை ஆணை யரே ஒரு பெண் பத்திரிகை நிருபருக்கு தவறாக செய்தி அனுப்புகிறார். பெண்க ளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல் துறையே இதுபோன்ற செயல் களில் ஈடுபடுகிறார்கள் என்பது வேத னையான விஷயம். பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று வெளியில் உலாவிக் கொண்டிருக்கி றார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என சட்டம் கூறுகிறது. ஆனல் காவல் துறை அதி காரியே அந்த பெண்ணின் பெயரை குறிப்பிட்டு பேசுகிறார். இப்படி பெண் ணின் பெயரை கூறினால் மற்ற பெண்கள் யாரும் புகார் அளிக்க வர மாட்டார்கள் என்பதுதான் அவர்களின் நோக்கம். சமூக செயல்பாட்டார்கள் மீது அவதூறு செய்திகள் பரப்பப்படுகின்றன. சிம்பு பாடிய பாடலுக்கு எதிராக உ.வாசுகி பேட்டி அளித்தார். உடனே அவர் மீது கீழ்த்தரமான அவதூறுகள் பரப்பப்படு கின்றன. அதேபோல் சமூக செயல் பாட்டாளர் சுந்தரவள்ளி குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறுகள் பரப்பப்படுகின்றன. இதுகுறித்து சைபர் குற்றப் பிரிவில் புகார் அளித்தும் இதுவரை அவதூறு பரப்பு வர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவே 6 மாதம் போரட வேண்டி யுள்ளது. சைபர் கிரைம் வெறும் சைபராக உள்ளது என்று குற்றம் சாட்டி னார்.
பெண்கள் உடல் மீதான, மன ரீதி யான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு அனைத்து பெண்கள் அமைப்புகளையும் அழைத்து விவா தம் நடத்த வேண்டும். மகளிர் ஆணை யம் அரசு சிறப்பு சட்டம் இயற்ற பரிந்துரைக்க வேண்டும் என்றார்.
ராதிகா
தமிழக காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத்துறை துணை இயக்குநர் ராதிகா பேசுகையில், மின்னணு ஊட கங்களும், சினிமாவும் ஆண்களை இப்படி நடந்து கொண்டால்தான் `ஹீரோ யிசம் என சித்தரிக்கிறது. அதுவும் குற்றங்கள் பெருக காரணமாக இருக்கின்றன. வீட்டில் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று கற்றுக் கொடுப்பதற்கு மாறாக பெண்களுக்கு எப்படி மரியாதை அளிக்க வேண்டும் என ஆண் பிள்ளைகளுக்கு கற்றுத் தர வேண்டும். ஆணோ, பெண்ணோ குழந்தைகளி டம் செல்போன் கொடுக்கும் போது கண்டிப்பும், கண்காணிப்பும் தேவை. குழந்தைகள் கணினியை பயன்படுத்து கிறார்கள் என்றால் பெற்றோர் அதை உடன் இருந்து கண்காணிக்க வேண்டும். பெற்றோர்களும் செல்போனை பயன் படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் அதை கண் காணிக்கிறார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. ஆட்டோ, பேருந்து, கார், ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் என எல்லா இடங்களிலும் நாம் செல்போனில் மூழ்கி விடுகிறோம். யாரவது நம்மை புகைப்படம் எடுக்கிறார்களா? பின் தொடர்கிறார்களா? என நம்மை சுற்றி என்ன நடைபெறுகிறது என்பதை கவனிப்பதில்லை.
சரியான உடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. 2 வயது குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படுகிறாள். அவள் என்ன டைபர்தானே அனிய முடியும். பெண் பணியாளர்கள் தங்கும் இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் உள்ளிட்ட எத்தனையோ சட்டங்கள் உள்ளன. இதுகுறித்த விழிப்புணர்வு தேவை. பொதுவாக இரவு நேர பார்ட்டியை தவிர்ப்பது நல்லது. உங்கள் தொலை பேசி எண்ணை அனைவரிடமும் வழங்காதீர்கள். குறிப்பாக பல பெரிய கடைகளில் பில் போடுவதற்கு முன் ரிவார்ட் பாயிண்ட் கிடைக்கும் என தொலைபேசி எண்ணை கேட்டால் கொடுக்காதீர்கள். ஆடையில்லாத, அரைகுறை ஆடை அணிந்த புகைப் படங்களை யாருக்கும் அனுப்ப வேண்டாம். முகநூலில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர்கள் உங்கள் இணைப்பில் இருந்தால் அகற்றி விடுங்கள். பழைய செல்போனை யாரிட மும் கொடுக்காதீர்கள். ஏனென்றால் அதில் உள்ள அனைத்து விவரங்களை யும், புகைப்படங்களையும் மீண்டும் எடுக்க முடியும். அதேபோல் இலவச மாக செயலி வழங்கப்படுகிறது என நாம் பதிவிறக்கம் செய்கிறோம். நாம் பதிவிறக்கம் செய்யும் போது அது கேட்கும், உங்கள் புகைப்படங்களை, தொலைபேசியில் உள்ள எண்களை நாங்கள் கையாளுவோம் என்று. நாமும் சரி என கூறிவிடுவோம். நாம் யோசிக்க வேண்டமா? ஏன் ஒருவர் நமக்கு ஒரு செயலியை இலவசமாக வழங்கிறார் என்று.
அதேபோல் வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களை நம்பாதீர்கள். அந்த தக வல் உண்மையா என்று உறுதி செய்யப் பட்ட பின் அதை பிறருக்கு அனுப்புங் கள். தினசரி செய்தித் தாள்களை படித் தாலே என்ன மாதிரியான குற்றங்கள் நடைபெறுகின்றன என்பதை அறிந்து கொள்ள முடியும். அதிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும். காவ லன் எஸ்.ஒ.எஸ். என்ற செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு பிரச்சனை என்றால் அந்த செயலியில் அமுக்கினால், அடுத்த 4 நிமிடத்தில் அந்த பகுதியில் உள்ள ரோந்து வாகனம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு வரும் என்றார்.
பேரா. சந்திரா
பேராசிரியர் சந்திரா பேசுகையில், சமூக செயல்பாட்டாளர்களை விமர்சிப் பதற்கு பின்னால் மிகப்பெரிய அரசி யல் இருக்கிறது. இணையதளம் அரசி யல் ஆயுதமாக பயன்படுத்தப்படு கிறது. இறந்து போனவர்களை குறித்து கூட தவறான தகவல்கள் பரப்பப்படு கின்றன. நவீன தொழில்நுட்பங்கள் நல்ல செயலுக்கும் பயன்படுகின்றன, கெட்ட செயல்களுக்கும் பயன்படு கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சமூகம் பெண்களை வளர்க்க வில்லை. மாறாக குழந்தைப் பருவத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும், பருவ வயதிற்கு பிறகு இப்படிதான் இருக்க வேண்டும் என வார்க்கப்பட்டி ருக்கிறார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று கூறுவதற்கே போராட வேண்டி யுள்ளது என்றார். இதில் மகளிர் ஆணையத் தலைவர் கண்ணகி பாக்கியநாதன், உதவி பேராசி ரியர் என்.ஏ.அறிவுக்கரசி, வழக்கறிஞர் ஸ்வப்ணா சுந்தர் ஆகியோரும் பேசி னர். முன்னதாக ஸ்வீடன் முன்னாள் மாணவர்கள் நெட்வொர்க் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஆர்.பிருந்து வாகினி வரவேற்றார். செயலாளர் ஏ.ராஜ கோபால் நன்றி கூறினார்.