சென்னை, ஆக. 30 - கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நாடு முழுவ தும் ஊரடங்கு அமல்ப டுத்தப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 7ம் கட்ட ஊரடங்கு அமலில் இருக்கி றது. இந்நிலையில் தமிழக காவல்துறை வெளி யிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கு மீறல் காரண மாக ரூ.22.01 கோடி அப ராதம் வசூல் செய்யப் பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாக னங்களில் வெளியே சுற்றிய 9 லட்சத்து 99 ஆயிரத்து 837 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 6 லட்சத்து 94 ஆயிரத்து 928 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இது தொடர்பாக 9 லட்சத்து 2 ஆயிரத்து 249 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.