‘மேலும்' வெளியீட்டகம் சார்பில் சனிக்கிழமையன்று (ஜூன் 29) சென்னையில் விமர்சன கருத்தரங்கம், விமர்சன விருதளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் ‘தீக்கதிர்' நாளிதழின் சென்னைப் பதிப்பு முன்னாள் பொறுப்பாசிரியரும், மொழிபெயர்ப்பாளருமான அ.குமரேசன், ஆய்வாளர் மூபின் சாதிகா ஆகியோருக்கு 'கணையாழி' பதிப்பாசிரியர் முனைவர் ம. ராசேந்திரன் இலக்கிய விமர்சன விருது வழங்கினார். அமைப்பின் பொறுப்பாளர்கள் சிவசு, தமிழவன், ஜமாலன், சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.