tamilnadu

img

அருந்ததியர் மயான ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சிபிஎம் போராட்டம்

கள்ளக்குறிச்சி, ஆக. 14- கள்ளக்குறிச்சி அருகே அருந்ததியர் இன மக்க ளின் மயானத்தை ரியல்  எஸ்டேட் நபர்கள் ஆக்கிர மித்துள்ளதை அகற்றக்கோரி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறி யல் நடைபெற்றது.  கள்ளக்குறிச்சி வட்டம் மாடூர் கிராமத்தில் அருந் ததியின மக்கள் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்க ளுக்கான மயானத்தை தனி நபர்கள் சிலரும், ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரும் அபகரித்து விற்பனை செய்ய முயன்றுள்ளனர். அதனை தடுத்து, மயா னத்தை அளந்து அத்து காட்டி  தொடர்ந்து பராமரிக்க வேண்டும் எனவும் அதிகாரி களுக்கு மனுக்கள் அனுப்பப்  பட்டன. ஆனால் பலன் இல்  லாததால் சில வாரங்களுக்கு முன்பு சிபிஎம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மயான ஆக்கிர மிப்பை அகற்றித் தருவதாக  வருவாய்த்துறை அதிகாரி கள் எழுத்து மூலமாக உறுதி  அளித்தனர். 

ஆனால் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்  கப்படாததால் வெள்ளி யன்று (ஆக. 14) மயான  ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சிபிஎம் சார்பில் சங்கு ஊதி சாலை மறியல் நடைபெற்றது. பின்னர் வருவாய்த்துறை யினர் பேச்சுவார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி யளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது. வட்டச் செயலாளர் பி. மணி தலைமையில் நடை பெற்ற போராட்டத்தில் மாநி லக்குழு உறுப்பினர் ஜி. ஆனந்தன், மாவட்டச் செய லாளர் டி.ஏழுமலை, செயற் குழு உறுப்பினர் டி.எம்.ஜெய்சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் அ.பா.பெரியசாமி, ஏ.நடேசன், இடைக்குழு உறுப்பினர்கள் செல்வராசு, சிவா, வேலு, வேலாயுதம், தனலட்சுமி, அருள்தாஸ், பாரத்ராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.