tamilnadu

img

பாகூரில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

பாகூரில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க  ஆட்சியரிடம் சிபிஎம் கோரிக்கை

புதுச்சேரி, ஜூன் 20- புதுச்சேரி மாநிலம், பாகூர் கொம்யூன் பகுதிக்கு உட்பட்ட பாகூர் மற்றும் பெரியார் நகரில் வசிக்கும் மக்களுக்கிடையே எந்தவித சச்சரவும் இல்லாத நிலையில் திடீரென சுடுகாடு நிலம் பிரச்சனை இருப்பது போன்ற சமூக பதற்றத்தை சில சமூக விரோத சக்திகள் எழுப்பியுள்ளனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் வெ. பெருமாள், இரா. ராஜாங்கம், தமிழ்ச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் கலியன், பாகூர் கமிட்டி உறுப்பினர்கள் சேகர்,அரிதாஸ் ஆகியோர் புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கனை சந்தித்த  கட்சித் தலைவர்கள், பாகூர் பகுதி மக்களிடம் பிரிவினைவாதத்தை ஏற்படுத்தும் சமூக விரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பாகூர் பெரியார் நகர் பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் சுடுகாடு நிலம் சம்பந்தமான உண்மை நிலையை விளக்கி தலைவர்கள், சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் சமூக விரோத சக்திகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். புகார் மனுவை பெற்றுக் கொண்ட ஆசிரியர் குலோத்துங்கன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.