போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டம்
கடலூர், செப். 15 - கடந்த 29 நாட்களாக போராடி வரும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதர வாக கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவையில் உள்ள அகவிலைப்படி மற்றும் பணி ஓய்வு நேரத்தில் வழங்க வேண்டிய பணப்பலன் கள் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கடந்த 29 நாட்களாக தொடர் காத்திருக்கு போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே.பக்கீரான் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசினார். இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.உதயகுமார், ஜே.ராஜேஷ் கண்ணன், பழ.வாஞ்சிநாதன், ஆர்.அமர்நாத், சிஐடியு மாவட்ட செயலாளர் டி.பழனிவேல், போக்குவரத்து ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி.பாஸ்கரன், சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.கே.ஏழுமலை, எம்.பி.தண்டபாணி, ஆர்.கே.சரவணன், எஸ்.பஞ்சாட்சரம், எம்.ஜெயபாண்டியன், ஸ்ரீபன்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
