tamilnadu

img

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிபிஎம் பாராட்டு

கடலூர், ஆக. 7- மத்திய அரசு பணியாளர் தேர்வாணை யம் சார்பில் 2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த  குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டி  அருகே உள்ள மருங்கூர்  கிராமத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா,  புதுப்  பேட்டையை சேர்ந்த  பிரியங்கா பண்ருட்டி யைச் சேர்ந்த கிருஷ்ணபிரியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  மாவட்டச் செய லாளர் டி.ஆறுமுகம், மாநிலக் குழு உறுப்பி னர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.உதயகுமார், எஸ்.திரு அரசு, நகரச் செயலாளர் உத்ராபதி, அண்ணா கிராமம் ஒன்றியச் செயலாளர் லோகநாதன் பண்ருட்டி ஒன்றியச் செயலாளர் தனபால் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது பேசிய மாவட்டச் செயலாளர், மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு இடையேதான் உயர் கல்வியை தொடர முடி கிறது. பெண்கள் அனைவரும் தன்னம்பிக்கை யும் விடாமுயற்சியும் கொண்டு செயல்பட் டால் வெற்றி இலக்கை அடைய முடியும் என்று  கூறினார்.

;