tamilnadu

img

தோழர் வை.கிருஷ்ணசாமி மறைவுக்கு சிபிஎம் இரங்கல்...

சென்னை:
தோழர் வை.கிருஷ்ணசாமி மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர்கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்ப தாவது:

சைதை பகுதிக்குழுவின் முன்னாள்செயலாளர் தோழர் வை.கிருஷ்ண சாமி (வயது 81) உடல்நலக்குறைவின் காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனளிக்காத நிலையில் நவம்பர் 4 புதன்கிழமையன்று மாலை காலமானார் என்கிற செய்தி மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்டான்டர்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக தன்னுடைய வாழ்க்கையை துவக்கிய வை.கிருஷ்ணசாமி மார்க்சிஸ்ட் கம்யூ
னிஸ்ட் கட்சியின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் தன்னை இணைத்துக் கொண்டவர். சைதை பகுதிக்குழு செயலாளராக பணியாற்றியவர். தீக்கதிரிலும் பணியாற்றியவர். சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர். அவசர நிலை காலத்தில் தனது வீட்டில் கட்சிக்கூட்டங்கள் நடத்த இடம் அளித்தவர். அவரது மறைவால் வாடும்அவரது குடும்பத்தாருக்கு அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.