tamilnadu

img

சிபிஎம் நடத்திய சமூக நீதி போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி!!!

சென்னை, ஆக. 1 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் வியாழக்கிழமையன்று (01.08.2024) சென்னையில் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான பி.ஆர். நினைவகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அருந்ததியர் உள் ஒதுக்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்று, கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு  சமூக நீதிக்கான பயணத்தில் ஒரு மகத்தான வெற்றி.

தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்திய போராட் டத்திற்கு கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும். இந்த தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மகிழ்ச்சி யுடன் வரவேற்கிறது.

உள்ஒதுக்கீடு செல்லும் 

தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றிய அருந்ததியர் உள் இடஒதுக்கீடு சட்டம் 2009 செல்லும் என்றும், பட்டியல் சாதியினர் மத்தியில் நிலவும் வேறு பட்ட அளவிலான ஒடுக்கு முறைகளை கணக்கில் எடுத்து உள்ஒதுக்கீடுகள் செய்வது அரசியலமைப்புச் சட்டம் 341 குடியரசுத் தலைவருக்கு தந்துள்ள அதிகாரங்களை மீறுவது ஆகாது என்றும், உள் ஒதுக்கீடுகளுக்கான போதிய தரவுகளோடு அது மேற் கொள்ளப்பட்டிருந்தால் அது செல்லத் தக்கது என்றும் உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்திருக்கிறது. 

மாற்றப்பட்ட முந்தைய தீர்ப்பு

இதன் மூலம் மாநில அரசுகள் உள் ஒதுக்கீடுகளை செய்வது குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் குறுக்கீடு செய்வதாகும் என்கிற 2005 ஈ.வி. சின்னையா (எ) ஆந்திரப் பிரதேசம் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மாற்றப்பட்டுள்ளது.

இவ்வாறு உள்ஒதுக்கீடு வழங்கு வது பட்டியலின மக்கள் மத்தியில் பிரி வினையை உருவாக்குவது, பார பட்சத்தை ஏற்படுத்துவது என்பன போன்ற எதிர் தரப்பு வாதங்களை நீதி பதிகள் நிராகரித்துள்ளனர். ஒரு சமூ கத்தில் வித்தியாசமான நிலைமைகள் உள்ளபோது, வித்தியாசமான அணுகு முறைகளை மேற்கொள்வதே சமநிலை யை பாதுகாக்க முடியும் என நீதிபதி கள் தீர்ப்பளித்துள்ளனர்.

அரசியல் தளத்தில்  போராடிய சிபிஎம்

இத்தீர்ப்பின் மூலம் அருந்ததிய மக்களின் நீண்ட கால கோரிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அப்போராட்டத்தை அரசியல் தளத்திலே முன்னெடுத்த பின், அது ஈடேறுகிற சூழல் ஏற்பட்டது என்பதும் வரலாறு.

அருந்ததியர்களுக்கான உள்இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 2007 ஜூன் 12ல் சென்னையில் 20 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. மேலும், உள் ஒதுக்கீடு கோரி பல்வேறு இயக்கங் களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுயேச்சையாகவும், இதர அருந்ததிய அமைப்புகளுடனும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியுடனும் இணைந்து நடத்தியது - போராடியது குறிப்பிடத் தக்கது. 

அப்போதைய முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களை தோழர் என். வரதராஜன் தலைமையில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் நேரில் சந்தித்து கோ ரிக்கை மனுவும் அளித்தும்வலியுறுத்தினர்.

கோரிக்கையை ஏற்ற கலைஞர் 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மண்டல அளவிலான மாநாடுகள், மாநில அளவிலான பேர ணிகள் ஆகியனவற்றை தொடர்ந்து நடத்தி மக்களின் கருத்தை திரட்டிய பின் புலத்தில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர், ஓய்வு பெற்ற நீதிபதி ஜனார் த்தனன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து அதன் அறிக்கையைப் பெற்று அருந்ததியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்ற வழி வகுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், 2005 இல் உச்ச நீதி மன்றத்தால் தரப்பட்ட தீர்ப்பு ஒன்றை முன்வைத்து அருந்ததியர் உள் ஒதுக்கீடு செல்லாது என்று வழக்கு கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்குகள் நிலு வையில் இருந்த சூழலில் அத்தோடு உயர் நீதிமன்ற வழக்கும் இணைக்கப் பட்டது.

வழக்கில் இணைந்த சிபிஎம்

இவ்வழக்கில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மேனாள் மாநி லச் செயலாளர்கள் என். வரதராஜன், ஜி. ராமகிருஷ்ணன், தமிழ்நாடு தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் சார்பில் மாநிலத் தலைவர் பி. சம்பத் ஆகி யோர் தங்களையும் இணைத்துக் கொண்டு வழக்கை நடத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

உள்இடஒதுக்கீடு குறித்து பெரும்பான்மை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இத்தீர்ப்பில் ஒரு நீதிபதி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளது ஏற்புடையதல்ல. பெரும்பான்மை தீர்ப்பு சமூகத்தின் கடைத்தட்டில் அழுந்திக் கொண்டி ருக்கிற அருந்ததிய மக்களுக்கு தீர்வைத் தந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை தருவதாகும்.

நீண்ட போராட்டத்திற்கு வெற்றி

அருந்ததியர் மக்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கிய டாக்டர் கலைஞர் அவர்களுக்கும், தமிழ்நாட்டில் அருந்த தியர் உள் ஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை முன் நின்று நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அருந்ததியர் இயக்கங்கள், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்ட  அமைப்புகளுக்கும் இத்தகைய உரிமைகளுக்காக பல்வேறு களங்களைக் கண்ட அருந்ததிய மக்களுக்கும் அவர்களுக்கு ஆதரவாக கைகோர்த்த ஜனநாயக உள்ளம் கொண்டோருக்கும் கிடைத்துள்ள மகத்தான வெற்றியாகும் இது.

நீண்ட நெடிய சட்டப் போராட்டத்தை  மதுரை உயர்நீதிமன்ற கிளையில் துவங்கி உச்சநீதிமன்றம் வரை நடத்தியுள்ள தமிழக அரசுக்கும், அனைத்து வழக்கறிஞர்களுக்கும், அமைப்புகளுக்கும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுக்களையும், வாழ்த்துக்களை யும் உரித்தாக்குகிறது.  இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தலித் சாதியினர்களிடையே உள் பகுப்பாய்வுக்கு அனுமதி
அரசியல் தலைமைக்குழு வரவேற்பு

தலித் சாதியினர்களிடையே உள்ள துணை பகுப்பாய்வுகளையும் அனுமதித்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வரவேற்று ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுவர் அடங்கிய அமர்வாயம் ஒன்றில் (6-1 என்கிற விகிதத்தில்) தலித் சாதியினர்களுக்கிடையே இருந்துவரும் துணை பகுப்பாய்வுகளை  (sub classification) அனுமதித்திருக்கிறது. மேலும் உச்சநீதிமன்றம் தலித் வகுப்பினர்க்குள்ளேயே மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களுக்காக (more backward)  தனி ஒதுக்கீடுகள் (separate quotas) ஏற்படுத்திடவும் அனுமதித்திருக்கிறது. உச்சநீதிமன்றம், துணை வகுப்பினரின் பிரதிநிதித்துவத்தின் போதாமை குறித்த அனுபவ தரவுகளின் அடிப்படையில் துணை வகைப்பாட்டை அரசு நியாயப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

அரசாங்கங்கள், உச்சநீதிமன்றத்தின் கட்டளையின்படி, பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களைக் கண்டறிந்து, அவர்களின் நிலைமைகளை முன்னேற்றிட உரிய வசதிகளைச் செய்துதரவும், இப்போது தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும். அரசாங்கங்கள் தலித் சாதியினருக்குள் பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களை மேம்படுத்துவதற்கும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.  (ந.நி.)

முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

தமிழ்நாட்டில் அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்பட்ட உள் இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்று, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்திருக்கிறது! முறையாகக் குழு அமைத்து, அதன் மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை தலைவர் கலைஞர் கொடுக்க - அதற்கான சட்டமுன்வடிவு பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.