tamilnadu

img

பொங்கலன்று தேர்வு நடத்த எதிர்ப்பு - எஸ்பிஐ தலைமையகம் முற்றுகை!

எஸ்.பி.ஐ வங்கியில் கிளார்க் பணியிடங்களுக்கு வட்டார அளவிலான நுழைவுத் தேர்வை பொங்கல் அன்று நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளில் தேர்வு நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிதியமைச்சகம் தேர்வு தேதி மாற்றாமல் உள்ளது. இதனை கண்டித்தும், மாற்று தேதியில் நடத்த தேர்வை வலியுறுத்தி பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சென்னை வட்டாரத் தலைமையகத்தை  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி. தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் கார்த்திக் உள்ளிட்ட கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து வங்கி அதிகாரிகள் சு.வெங்கடேசன், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா, எல்.சுந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.