tamilnadu

img

முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த சிபிஎம், சிபிஐ, விசிக தலைவர்கள்!

சிபிஎம், சிபிஐ மற்றும் விசிக தலைவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். 
சாம்சங் தொழிலாளர் பிரச்சனை தொடர்பாக நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தை உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து, சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ பொதுச் செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அமைச்சர் எ.வ.வேலு உடனிருந்தார்.
நீதிமன்றத்தில் உள்ள தொழிற்சங்கத்தை பதிவு செய்வது தொடர்பான வழக்கை விரைவாக முடித்து, அதில் உரிய நடவடிக்கை எடுத்து சங்க பதிவுக்கு உதவ வேண்டும்; போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளையும் முதலமைச்சரிடம் முன்வைத்தனர்.