tamilnadu

img

கே.பாலகிருஷ்ணுக்கு கொரோனா தொற்று : அரசு மருத்துவமனையில் அனுமதி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனுக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதையடுத்து கே.பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பதிவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன். என்று தெரிவித்துள்ளார்.