சென்னை, ஜூன் 23- சென்னையில் 3 மண்டலங்களில் பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் பரவி வருகிறது. 42 ஆயிரத்து 752 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 623 பேர் இறந்தனர். 23 ஆயிரத்து 756 பேர் குணமடைந்துள்ளனர். 18 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் ஆண்கள் 60.22 சதவீதமாகவும், பெண்கள் 39.78 சதவீதமாகவும் உள்ளனர். சென்னையில் உள்ள 32 ஆயிரம் தெருக்களில், 7 ஆயிரத்து 500 தெருக்களில் கொரோனா தொற்று பரவி உள்ளது. மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் 3 மண்டலங்களில் பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. அதிகப்பட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 6484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கடுத்து தண்டையார் பேட்டை மண்டல்த்தில் 5227 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 5110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கோடம்பாக்கம் மண்டலத்தில் 4649 பேரும், அண்ணாநகர் மண்டலத்தில் 4585 பேரும், திரு.வி.க. நகர் மண்டலத்தில் 3628 பேரும், அடையாறு மண்டலத்தில் 2531 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 1784 பேரும், அம்பத்தூர் மண்டலத்தில் 1601 பேரும், திருவொற்றியூர் மண்டலத்தில் 1587 பேரும், மாதவரம் மண்டலத்தில் 1191 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ஆலந்தூர் மண்டலத்தில் 965 பேரும், பெருங்குடி மண்டலத்தில் 884 பேரும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 808 பேரும், மணலி மண்டலத்தில் 624 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த தினசரி 500 மையங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.