விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு மருத்துவமனை, வளத்தி மற்றும் மேல்சித்தாமூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் அண்ணாதுரை ஆய்வு மேற்கொண்டார். உடன் செஞ்சி எம்.எல்.ஏ. மஸ்தான், சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் மணிமேகலை, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி, செஞ்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரசாந்த், சுகாதாரம் குறித்த மாவட்ட திட்ட அலுவலர் பிரகாஷ், வட்டாட்சியர் கோவிந்தராஜ் உட்பட பலர் இருந்தனர்.