சென்னை,மார்ச் 8- தமிழகத்தில் கொரோனா முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி திங்களன்று(மார்ச் 9)ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு வருக்கும், சந்தேகத்தின் பேரில் அமெரிக்க வாழ் 15 வயது இந்திய சிறுவனுக்கும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் தனி வார்டில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்த நிலையில் மாவட்ட வாரியாக கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட்சியர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. சுற்றறிக்கை யின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரி களுடன் திங்களன்று(மார்ச் 9) ஆலோசனை நடத்த உள்ளார். இந்த கூட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன