tamilnadu

img

கொரோனாவுக்கு திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் பலி

சென்னை:
வடசென்னை மாவட்ட திமுகவின் முன்னாள் செயலாளர் எல்.பலராமன் கொரோனா தொற்றால் ஞாயிறன்று (ஜூன் 21) காலை சென்னை தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலராமன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஞாயிறன்று காலை உயிரிழந்தார்.இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “வடசென்னை மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், தற்போது கழகத்தின் தணிக்கைக்குழு உறுப்பினருமான எல்.பலராமன், கோவிட்-19 நோய்த் தொற்றால் மறைவெய்தினார் என்ற அதிர்ச்சிச் செய்தியால் நான் மீளாத் துயரத் திற்கும், சோகத்திற்கும் உள்ளாகியிருக்கிறேன்.

அவர் மறைந்தாலும் அவரது பணிகளும், தியாகங்களும் மறையாது. எல்.பலராமனின் மறைவால் வாடும் அவரது குடும்பத் திற்கும், உறவினர்களுக்கும், அனைத்து கழகத் தொண்டர் களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

;