சென்னை, மார்ச் 8- தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். சீனாவின் வூகான் நகரில் கொரோனா வைரஸ் நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் நோய் மேலும் சில நாடுகளுக்கு பரவியுள்ளது. வைரஸ் பரவலை இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஓமனில் இருந்து தமிழகம் திரும்பிய காஞ்சிபுரம் இன்ஜினீயருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அவர் சென்னை அரசு மருத்துவமனையின் தனி வார்டில் அனு மதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தி யாளர்களிடம் கூறுகையில், தேவையற்ற பயணங்களை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். நோய் பரவுவதை தடுப்பதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் உள்ளன. மஸ்கட்டில் இருந்து வந்த 27 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 60 ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில் 59 மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ஓமனிலிருந்து வந்த நபரை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது கொரோனா அறிகுறி இல்லை. தேனியில் புதிதாக ரத்த பரிசோதனை மையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.