tamilnadu

img

சென்னை: ஐஐடியில் 17 மாணவர்கள் உள்ளிட்ட 53 பேருக்கு கொரோனா

சென்னை ஐஐடியில் 17 மாணவர்கள் உள்ளிட்ட 53 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
சென்னையில் தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் சென்னை ஐ.ஐ.டி.யிலும் கொரோனா தொற்று பரவியது. அங்குள்ள 17 மாணவர்கள் உள்பட 53 பேருக்கு கடந்த 5-ந்தேதி முதல் 9-ந்தேதி வரையில் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள ஊழியர்கள் குடியிருப்பில் தங்கியுள்ளவர்களும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து ஐ.ஐ.டி.யில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், கொரோனாவால் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் விடுமுறை முடிந்து கல்லூரிக்கு திரும்பும் மாணவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கொண்டுவர வேண்டும். அல்லது ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஐ.ஐ.டி. வளாகத்திலும் ஒட்டப்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி கூறுகையில், ‘விடுமுறையில் சென்ற மாணவர்கள் மீண்டும் கல்லூரிக்கு வரும்போது மாநகராட்சியின் விதிமுறையின்படி கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டும். அல்லது ஒரு வாரம் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.