சென்னை, ஏப்.22- உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இளம் பத்திரிகையாளர்கள் இருவருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்த நிகழ்வு பத்திரிக்கை உலகத்தையே அதிர வைத்தது. இந்நிலையில் மும்பையில் 50 பேருக்கு வைரஸ் தொற்று பரவி இருப்பது பெரும் புயலை ஏற்படுத்தி யது. இதனையடுத்து சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களுக்கு இலவசமாக பரிசோதனை நடத்த வேண்டும் என்று அனைத்து சங்கங்களும் கோரிக்கை விடுத்தன. இதனை ஏற்று அரசும் மாநகராட்சியும் இந்த பணியை துவக்கியது.
எழும் மாவட்டங்களிலும் இந்த பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் சென்னையில் மேலும் 10 பத்திரிக்கையாளர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேர் ராயபுரத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி யில் பணிபுரிபவர்கள். இந்த நிலையில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் செய்தியாளர்கள் தமது பணியின்போது கொரோனா தொற்று ஏற்படாமல் இருக்க தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் செய்தி நிறுவனங்கள் தங்களது பணியாளர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுரை வழங்கியுள்ளது.